வியாழன், 27 நவம்பர், 2014

புரூஸ் லீ ரசிகனாக எனக்கு கோபம் வருகிறது:



உலகம் பார்த்து வியந்த மனிதன் புரூஸ் லீ. வலிமையின் உச்சமாக திகழ்ந்தவர்.

அத்தகைய வலிமைமிக்கவரை நகைச்சுவை நடிகர் சந்தானம் ஒரு தமிழ் திரைப்படத்தில் தமா துண்டு பையன் என்று கேலி செய்கிறார். புரூஸ் லீயை கலாய்க்கும் தகுதி கொஞ்சம் கூட அவருக்கு கிடையாது. பொதுவாக சந்தானம் கவுண்டமணியை காப்பி அடிப்பதாக சொல்வார்கள். கவுண்டமணி புரூஸ் லீயை பல படங்களில் புகழ்ந்தே பேசுவார். காப்பி அடித்தாலும் கூட நல்ல விஷயங்களை காப்பி அடிக்க மாட்டாரா?

கலாய்ப்பது ஒரு தகுதியான விஷயமே இல்லை. எல்லோரையும் கலாய்பது போல்  புரூஸ் லீ யையும்  கலாய்ப்பது புரூஸ் லீ ரசிகனாக எனக்கு கோபம் வருகிறது. அதுவும் அவர் பிறந்தநாளான இன்று  இன்னும் அதிக கோபம் வருகிறது....

இவன்
நிரஞ்சன்

வெள்ளி, 14 நவம்பர், 2014

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்


இதுவரை பிறந்திருக்கும் குழந்தைகளுக்கும், இனி பிறக்க போகும் குழந்தைகளுக்கும், ஏற்கனவே குழந்தையாய் பிறந்து வளர்ந்தவர்களுக்கும், தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும், அதை சுமந்து கொண்டிருக்கும் அந்த தாய்க்கும், குழந்தையை கொடுக்கும் ஆண்களுக்கும், வயிற்றில் சுமந்து வலிக்க வலிக்க பெற்று எடுக்கும் பெண்களுக்கும், குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பவர்களுக்கும், குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குழந்தை மனம் படைத்தவர்களுக்கும், மிக பெரிய கொலைகாரனாக இருந்தாலும் குழந்தைகளை கொல்ல மனமில்லாதவர்க்கும்........... முக்கியமாக குழந்தை பிறக்க காரணமாய் இருக்கும் காமத்துக்கும் என்

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.


இவன்
நிரஞ்சன்