பின் குறிப்பு: ஜெர்சி போன்ற வெளிநாட்டு மாடுகளின் பால் (A1 milk) எப்படி கெடுதியோ,அதேபோல் அதன் கறியும் கெடுதல் தான்... தரம் அறிந்து உண்ணுங்கள்!
இவன்
நிரஞ்சன்
சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்பட்டாலும் அது விழாவாக கொண்டாடப்பட்டாலும் நாம் இன்னும் ஆண்டவர்களால் ஆளப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம் என்பதை தோலுரித்துச் சொல்லுவதே இந்த புத்தகம்.... அரசியல் ரீதியில் இல்லாமல் கலாச்சார ரீதியில் நாம் இழந்தது என்ன? என்பதை இப்புத்தகம் விவரிக்கிறது..காலனியம் தான் முடிவுக்கு வந்ததே தவிர அதன் பின் விளைவுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.... நமது அடையாளங்களை இழப்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை... நமது சுயம் நம்மை விட்டு போன பிறகு பகுத்தறிவு, அனைவரும் சமம் என்று சொல்வதெல்லாம் வெறும் பிதற்றல்... நாம் அடிமையே! என்பது தான் உண்மை.... நாம் நம் மொழியின் அவசியம், இயற்கை புரியாமல் நம் சுயத்தை இழந்து உலகமயமாக்கல் செய்யப்பட்ட இவ்வுலகில் உலகமயமாக்கலின் சூத்திரதாரிகளின் நகலாகவும் அவன் அடிமையாகவும் இருக்கிறோம்...