செவ்வாய், 16 அக்டோபர், 2012

மதம்

மதங்கள் அனைத்தும் நாம் உருவாக்கியதே 
             அணைத்து மதங்களுமே நல்ல கருத்துக்களை தான் சொல்லுகிறது .
மனிதர்களுக்கு  ஒழுங்குமுறைகளை  கற்றுகொடுப்பதே மதம். சண்டையிட்டுக்கொள்ள அல்ல. ஆனால் சண்டையிட்டுக்கொள்வது சகஜமே ஏனெனில் பிரிவினை இருந்தால் சண்டை வர தான் செய்யும்  இது எக்காலத்திலும் மாரிவிடபோவதில்லை . அது இயல்பு தான். நாங்கள் இந்த மதம் என்று அடித்துக்கொள்பவர்கள் , தன மதத்துக்குள்ளேயே  நாங்கள் இன்ன சாதி என்று அடித்து கொள்கிறார்கள் இல்லையா, எனவே இது மதச்சண்டையோ சாதிச்சண்டையோ இல்லை தன நிலையை பெருமை படுத்தவே எழும் சண்டை. அவ்வளவுதான்.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் மதங்கள் அனைத்தும் நாம் உருவாக்கியதே. இது ஒரு சாதாரண விஷயம். இதில் பெருமை பீத்திக்கொல்வதர்க்கு ஒன்றும் இல்லை என்றே சொல்கிறேன். ஆங்கிலேயர்கள் வந்தார்கள் கிறிஸ்துவ மதம் வந்தது. அதற்க்கு முன்பே அரேபியர்கள் வந்தார்கள் இஸ்லாம் மதம் வந்தது அதற்க்கு முன்பே புத்த மதம், ஜெயின  மதம், சீக்கியர்கள், இருந்தார்கள் அதற்க்கு முன்பு இந்து மதம், மதம் என்று எல்லாம் இல்லாமல் இந்து சமவெளி நாகரீகத்தை (indus valley civillization) பின்பற்றுபவர்களாகவே இருந்தார்கள். மற்ற மதங்கள் வந்த பிறகு இந்து மதம் என்று கூறப்பட்டது .  இந்து சமவெளி நாகரீகத்தை பின் பற்றியதால் தான் இந்தியா என்றே பெயர் வந்தது. ஆரம்பத்தில் சைவம் வைணவம் என்ற பிரிவே இருந்தது. அதற்க்கு முன்பு வைணவம் இல்லை சைவம் மட்டுமே இருந்தது. அதற்க்கு முன்பு ஒரு மதமும் இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது நாம் மனிதர்கள் மட்டுமே. மதங்கள் என்பது நாம் உருவாக்கியதே.

-இவன் நிரஞ்சன்



1 கருத்து:

  1. தன்னை பெரியவன் என காட்டிக்கொண்டு ஒரு கூட்டத்தை அடக்கி தலைவனாக உருவாக்கியதே சில மதங்கள் என்பது என் கருத்து...

    பதிலளிநீக்கு