சனி, 28 ஜூன், 2014

சூர்யா கார்த்தி காபி விளம்பரம்:

சிவகுமார் காபி, டீ குடிப்பது கெடுதல். குடிக்க வேண்டாம் என்கிறார். ஆனால் அவர் மகன்கள் நடிகர் சூர்யாவும் கார்த்தியும் குடிக்க சொல்லி விளம்பரம் செய்கிறார்கள். உண்மையில் காபி டீ உடலுக்கு கெடுதல். இது எல்லோருக்கும் தெரிகிறது. காபி நான் குடிக்க மாட்டேன் என்று சொன்னால், நல்ல பழக்கம் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் காபி டீ குடிப்பதை நிறுத்த முடியவில்லை. பொதுவாகவே காபி கெடுதல். நம் நாட்டிற்கோ அதன் தூசி தான் காபி என்ற பெயரில் வருகிறது. அப்படியானால் பார்த்துகொள்ளுங்கள்.

சூர்யா ஜோதிகா சன்ரைஸ்(SUNRISE) விளம்பரம்:

 சூர்யா ஜோதிகா திருமணத்தை பல பைத்தியகாரனுங்க புனிதம் ஆக்குனானுங்க.. பல கேவலமான மிருக பயலுக கொச்சை ஆக்குனானுங்க.. இந்த மாதிரி முதலாளிங்க வியாபாரம் ஆக்குரானுங்க...

கார்த்தி காஜல் ப்ரூ(BRU) விளம்பரம்:

கார்த்தி படத்தில் எப்படி ஈஈஈஈஈஈ  னு இழிப்பாரோ அது மாதிரியே இழிக்கிராறு.... அவர் விளம்பரத்தை பாத்துட்டு பல மனைவிகள் கணவரை ப்ரூ போட்டு தர சொல்லி கேட்க்கிறார்களாம்...

சூர்யா காம்ப்ளான்(COMPLAN) விளம்பரம்:

இந்த விளம்பரத்தில் ஒரு சின்ன பையன் "ஜெயிக்க மனசுல வெறி இருந்த போதும் சூர்யா அப்பா" அப்டின்னு சொல்லிட்டு காம்ப்ளான் ஐ குடிச்சிட்டு உடனே தண்ணீர்ல விழுந்து நீந்துவான். எதாவுது சாப்பிட்ட உடனே தண்ணீர்ல இறங்க கூடாது அப்டீன்னு அறிவியல் சொல்லுது. இந்த சின்ன விஷயம் கூட தெரியாத ஒருத்தன் நீச்சல் வீரனா? ஐயோ செம காமெடி!!!!

"நடிகர்களுக்கு அரசியல் தேவை இல்லை 
ஆனால் அரசியல் ஞானம் தேவை"

இல்லையென்றால் நடிகர்களின் முட்டாள் தனத்தையும், ரசிகர்களின் பைதியகாரத்தனதையும் வியாபாரிகள் பயன்படுத்துவார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் இரண்டு பெண்கள்(சகோதரிகள்). ஒருத்தி சூர்யா ரசிகை(பைத்தியம்) இன்னொருத்தி கார்த்தி ரசிகை(பைத்தியம்). அதனால் அவர்கள் அம்மா ப்ரூ, சன்ரைஸ்  இரண்டு காபி தூளும் வைத்திருப்பார். ஐயோ செம கொடுமை.

இவன்
நிரஞ்சன்.

சனி, 14 ஜூன், 2014

கல்வி ஓர் கிளைச் சாக்கடை:

இக்கல்வி ஓர் கிளை சாக்கடை. அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் கூறுகின்றீர்கள். அப்படியானால் அதில் ஒரு பிரிவாய் இருக்கும் இந்த கல்வியும் சாக்கடையாக தானே இருக்கும். பிறகு ஏன் இந்த கல்வியை உங்கள் பிள்ளைகளுக்கு திணிக்கிறீர்கள்? எப்படி இந்த கல்வியை உயர்வாக நினைக்கிறீர்கள்? ஏன் அதன் மீது இவ்ளோ மோகம்? ஏன் சிறந்த பள்ளிகூடத்தில் உங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று பைத்தியம் பிடித்து நிற்கின்றீர்கள்? கல்வியே சரி இல்லை என்பதை உணர்ந்து விட்டால் பள்ளிகூட மோகம் இருக்காது. உங்கள் பைத்தியகார தனத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். அவர்கள் வைக்கும் ப்ளெக்ஸ் போர்ட், அவர்கள் செய்யும் விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்.

சிந்தியுங்கள். இந்த கல்வி ஒரு சாக்கடை. நீங்கள் ஏன் சாக்கடையில் மொய்த்து கொண்டிருக்கும் கொசு போல இருக்கிறீர்கள்.

இவன்
நிரஞ்சன் 

வெள்ளி, 6 ஜூன், 2014

எண்ணெய் தேய்த்து குளித்தல்

வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதை பற்றி  சொல்கிறேன் கேளுங்கள்.


நல்ல எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது. தலையில் மட்டும் அல்ல உடல் முழுவதும் (மர்ம உறுப்புகள், பாதங்கள்  உட்பட) தேய்த்து குளிக்க வேண்டும். காதுகளில் இரண்டு சொட்டு எண்ணெய் விடுவது நல்லது. ரொம்ப முக்கியம் gold winner போன்ற கடைகளில் விற்க படும் எண்ணெய் வேண்டாம்.  சுத்தமாக செக்கில் ஆட்டிய எண்ணெய். உபயோகிக்கவும். அவை அனைத்து இடத்திலும் கிடைக்கும். இல்லை என்றால் நீங்களே எள்ளு வாங்கி மில்லில் கொடுத்து அரைத்து வாங்கி கொள்ளலாம்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்கள்:

ஆண்கள் சனி, புதன்.
பெண்கள் செவ்வாய், வெள்ளி.
மற்ற நாட்களில் குளிப்பது நல்லது அல்ல

பலர் ஞாயிறு விடுமுறை என்பதால் அன்று தான் குளிக்கிண்டனர். அது தவறு. "ஞாயிற்று கிழமை கழுதை கூட எள்ளு காட்டு பக்கம் போகாது" என்பது பழமொழி. சனி நீராடு என்பதும் பழ மொழி. நீங்கள் பிறந்த நட்சத்திரம், திதி, கிழமையில்,  குளிக்க கூடாது. குளித்தால் பலன் கொஞ்சம் குறையும் அவ்வளவு தான்.

தேய்க வேண்டிய நேரம்:
காலை 5 - 7 (நல்லது)
                7 - 12(குறைந்த பலன்)
         12 க்கு மேல் பலன் இருக்காது.
உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் வைத்து இருந்து பிறகு குளிக்கவேண்டும். ரொம்ப நேரம் தேய்த்து வைத்திருக்க கூடாது.

எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்ய கூடாதவை:
 1. தூங்க கூடாது.
      தூங்கினால் பலன் இருக்காது இரவு வரை தூங்க கூடாது. ஏன் என்றால் உங்கள் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறி கொண்டிருக்கம். அப்போது  தூங்கினால் உடல் பாதிக்கும். ஆனால் தூக்கம் வரும்.

2. உடலுறவு (sex) கூடாது.

3. உடல் தேய்த்து வைத்திருக்கும்போது கண்ணாடி  பார்க்க கூடாது.

4.பழங்கள், மோர், தயிர், பால், ஜூஸ், ஐஸ் க்ரீம் , போன்ற எந்த குளிர்ச்சி  பொருட்களும் உன்ன கூடாது.

5. ஓடி ஆடி வேலை செய்யவோ, விளையாடவோ கூடாது. முழுக்க முழுக்க ஓய்வாக இருக்க வேண்டும் ஆனால் தூங்க கூடாது.

அவசியம் செய்யுங்கள்.
 
இவன் நிரஞ்சன்