வியாழன், 10 ஆகஸ்ட், 2017

"A" படம்



18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் அனைவரும் கண்டிப்பாக "A" படம் பார்க்க வேண்டும்... 

ஏனெனில் "A" படம் என்பது ஆபாச படம் மட்டும் அல்ல,  
அரசியல் படமும் "A" படம் தான்.

ஞாயிறு, 23 ஜூலை, 2017

வட்டியும் முதலும்: நான் படித்த புத்தகம்


எழுதியவர்: எழுத்தாளர் ராஜூமுருகன் (ஜோக்கர் பட இயக்குனர்)
பக்கங்கள்: 504

பசியை பற்றி தொடங்கிய புத்தகம் பசி குறையாமல் படிக்க வைத்தது.... அவர் பிறந்த ஊர் நான் பிறந்த ஊரான மன்னார்குடி க்கு அருகில் இருக்கும் அபிவிருதீஸ்வரம் (கொரடாச்சேரி பக்கத்தில் உள்ள கிராமம்) என்பதால் இந்நூலில் வரும் நிகழ்வுகளின் புவியியல் எனக்கு நெருக்கமானதாக இருந்தது.
 ராஜூமுருகன்  அவர் வாழ்க்கையில் சந்தித்த நபர்களை, நிகழ்வுகளை கொண்டு ஆழமான அனுபவங்களை எழுதி இருக்கிறார்...... இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் நம் அனுபவத்திலும் உண்டு.... நாம் உணராமல் நம்மில் பதிவாகி இருந்த அந்த நிகழ்வுகள், நபர்கள் வெளியில் வருவார்கள்.... இந்த புத்தகம் ராஜூமுருகன் நம்முடன் பேசிக்கொண்டு இருப்பதை போன்றது... பசி, தவிப்பு, சோகம், விரக்தி போன்ற விடயங்களை பகிர்ந்து  நேர்மறையான எண்ணத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்குகிறது... அவசியம் படியுங்கள்.

இவன் 
நிரஞ்சன்  

செவ்வாய், 30 மே, 2017

மோடி அரசாங்கம் இந்து மத பற்றாளர்கள் இல்லை


மோடி அரசாங்கம் இந்து மத பற்றாளர்கள் இல்லை.  இஸ்லாம் மத எதிர்ப்பாளர்கள் இல்லை.... மத பற்றையும் மத எதிர்ப்பையும் பயன்படுத்தி கொள்பவர்கள்..... அவர்கள் மத விசுவாசிகள் இல்லை பணத்தின் விசுவாசிகள்.... முதலாளிகளின் லாபத்திற்காக மதங்களுக்கிடையே சண்டை மூட்டும் அடிமைகள்.... இஸ்லாமியர்கள்   மாட்டுக்கறி உண்பதற்கு மகத்துவமான அர்த்தபூர்வமான  காரணங்கள் இருக்கிறது.... மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்பதற்கு ஆரோக்கியம் சார்ந்த காரணங்கள் இருக்கிறது..... இரண்டையும் உணர்ந்து செயல்படுவதே காலத்தின் தேவை

பின் குறிப்பு: ஜெர்சி போன்ற வெளிநாட்டு மாடுகளின் பால் (A1 milk) எப்படி கெடுதியோ,அதேபோல்  அதன் கறியும் கெடுதல் தான்... தரம் அறிந்து உண்ணுங்கள்!

இவன்
நிரஞ்சன் 

வெள்ளி, 12 மே, 2017

இந்தியன் ஆவது எப்படி?: நான் படித்த புத்தகம்



இந்தியன் ஆவது எப்படி?
"Becoming Indian: The Unfinished Revolution of Culture and Identity"
எழுதியவர்: பவன் கே.வர்மா
      தமிழில்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
 கிழக்கு பதிப்பகம்  

இப்புத்தகத்தை இந்தியனாக அல்ல தமிழனாக படித்தேன்.... இப்புத்தகத்தை குஜராத்தியாகவும் படிக்கலாம், மராத்தியனாகவும் படிக்கலாம், தெலுங்கனாகவும் படிக்கலாம். எல்லா இனத்திற்கும் இப்புத்தகத்தின் கரு பொருந்தும்... நான் தமிழனாக படித்தேன்.

சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்பட்டாலும் அது விழாவாக கொண்டாடப்பட்டாலும் நாம் இன்னும் ஆண்டவர்களால் ஆளப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம் என்பதை தோலுரித்துச் சொல்லுவதே இந்த புத்தகம்.... அரசியல் ரீதியில் இல்லாமல் கலாச்சார ரீதியில் நாம் இழந்தது என்ன? என்பதை இப்புத்தகம் விவரிக்கிறது..காலனியம் தான் முடிவுக்கு வந்ததே தவிர அதன் பின் விளைவுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.... நமது அடையாளங்களை இழப்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை... நமது சுயம் நம்மை விட்டு போன பிறகு பகுத்தறிவு, அனைவரும் சமம் என்று சொல்வதெல்லாம் வெறும் பிதற்றல்... நாம் அடிமையே! என்பது தான் உண்மை.... நாம் நம் மொழியின் அவசியம், இயற்கை புரியாமல் நம் சுயத்தை இழந்து உலகமயமாக்கல் செய்யப்பட்ட இவ்வுலகில் உலகமயமாக்கலின் சூத்திரதாரிகளின் நகலாகவும் அவன் அடிமையாகவும் இருக்கிறோம்...

ஒரு வல்லரசாக அல்ல, குறைந்தபட்சம் சுதந்திரமான ஒரு நாடக தமிழகம் மாறவேண்டுமென்றால் நாம் முதலில் கலாச்சார ரீதியில் தமிழர்களாக மாறியாக வேண்டும்.

இவன்
நிரஞ்சன்

ஞாயிறு, 26 மார்ச், 2017

"மீத்தேன் அகதிகள்" ஆவணப்படம் (documentary film)


மன்னார்குடியில் நடைபெற்ற "மீத்தேன் அகதிகள்" ஆவணப்படம் (documentary film) திரையிடல்  மற்றும் "மீத்தேன் அகதிகள்" என்னும் நூல் வெளியீட்டு விழாவில்.... அரசு தடை விதித்ததால் ஆவணப்படம் திரையிட படவில்லை.... இன்னும் சிறப்பாக கலந்துகொண்ட அனைவருக்கும் குறுந்தகடாக கையில் கொடுக்கப்பட்டது.... அதை இன்று தான் பார்த்தேன்.... அனைவரும் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

"மீத்தேன் அகதிகள்" ஆவணப்பட  இயக்குனர் : சரவணன் தங்கப்பா

youtube link: https://www.youtube.com/watch?v=a_qKacN8Rso

இவன்
நிரஞ்சன் 

புதன், 8 மார்ச், 2017

அவசியமான பகுத்தறிவு


"சந்திராயன்-1 ஏவுகணை அனுப்பி சந்திரனில் தண்ணீர் இருக்கு என்று கண்டு பிடித்தோம்... அடுத்து சந்திராயன்-2 ஏவுகணையை சந்திரனுக்கு அனுப்பி அது சரிதானா என்பதை கண்டுபிடிப்போம்."
- mayilsamy annathurai
ISRO scientist
சந்திராயன் -2 கண்டுபிடித்தது சரிதானா என்று கண்டுபிடிக்க சந்திராயன்-3 விடுவீர்களா?
சந்திராயன் -3 கண்டுபிடித்தது சரிதானா என்று கண்டுபிடிக்க சந்திராயன்-4 விடுவீர்களா?
என்னங்கடா இது!!!!
ஆன்மீகத்தையும் ஆன்மீகவாதிகளையும் கேலி செய்வதை விட விஞ்ஞானத்தையும் விஞ்ஞானிகளையும் கேலி செய்வது தான் தற்போது அவசியமான பகுத்தறிவு

இவன்
நிரஞ்சன்   

செவ்வாய், 31 ஜனவரி, 2017

அனிரூத் வைரலாகும் வீடியோ

ஒரு ஆண் பெண் உடலுறவை படம் எடுத்து ரசிப்பது, கேலி செய்வது, memes போடுவதை விட கேவலமான செயல் வேறு ஒன்றும் இல்லை.... காமம் ஒரு மகத்துவமான விஷயம்.... கூத்து அல்ல.....
இது அனிரூத் இல்லை.... ஏன் trisha bathroom வீடியோ கூட trisha இல்லை...fake


இன்னும் சொல்வதென்றால் நித்யானந்தா ரஞ்சிதா வீடியோ கூட fake ஆக இருக்கலாம். ஏனெனில் அந்த வீடியோ காட்சி லாட்ஜ் ல் எடுத்தது போல் இருக்கும்.... நித்யானந்தா ஆஸ்ரமம் முழுக்க முழுக்க செம் மண்ணில் செய்தது.