செவ்வாய், 21 ஏப்ரல், 2015

தீய செயல்கள் ஒரு தொடர்ச்சி..

தீய செயல் செய்பவன் தீய செயலுக்கு ஆளானவன்..
-----
அடுத்தவன் வயிற்றில் அடிப்பவன் இன்னொருவனால் வயிற்றில் அடிக்க பட்டவன்...
-----
அடுத்தவனை கெடுப்பவன் இன்னொருவனால் கெடுக்க பட்டவன்...
-----


 ஒரு தவறுக்கு அதற்க்கு முன்பு நடந்த தவறு தான் காரணமாய் இருக்கும்...இது ஒரு தொடர்ச்சி.. இதை அரசாங்கம் என்ன செய்கிறது?... இந்த தொடர்ச்சியை தொடர விட்டுக்கொண்டே இருக்கிறது அரசாங்கம்.... தீய செயல் செய்தவனை தண்டிக்கும் சட்டம், அவன் தீய செயலுக்கு ஆளானவன் என்பதை கணக்கில் எடுத்துகொள்வதில்லை....மாறாக அந்த தீய செயலுக்கு பின்னணியை இருந்த தீய செயலை செய்த நபரையும் தண்டித்திருக்கும்.... இது அச்செயலை ஒழிக்கும் முயற்சியே அல்ல...அரசாங்கம் நாட்டில் நடக்கும் குற்றங்களை கண்டுகொள்ளவில்லை... போலீஸ் தூங்குகிறது...சட்டம் ஒரு இருட்டறை  என்றெல்லாம் சொல்வதை விட குற்றங்களுக்கு அவை தான் காரணமாகவே இருக்கிறது.

.இவன்
நிரஞ்சன்

சனி, 11 ஏப்ரல், 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 7: அப்பயனும்...!


முதலாளிக்கு உழைத்து போடுவதில் தொழிலாளி அடையும் ஒரே பயன், வேர்வை வழியே வெளியேற்றப்படும் கழிவு தான்... தற்போது குளிரூட்டப்பட்ட அறையில்(AC)  அப்பயனும் ஒழிந்தே போனது...

இவன்
நிரஞ்சன் 

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மக்களாகிய நாம்: நான் படித்த புத்தகம்

மக்களாகிய நாம்- ஆ.கி.வேங்கட சுப்பிரமணியன்

    

இப்புத்தகத்தை எழுதியவர் ஆ.கி. வெங்கட சுப்பிரமணியன். IAS அதிகாரி.
இப்புத்தகத்தை என்னை படிக்க தூண்டியது அதன் முன் அட்டையில் இருக்கும் வரிகள்.. அவை "இந்த அரசியல்வாதிகளைத் திருத்தவே முடியாது என்று வெறுமனே அங்கலாயித்துகொள்வதில் பொருள் இல்லை. அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் துடிப்பான பிரஜைகளாக நாம் மாறியாக வேண்டும். நமக்குத் தேவையானதை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். தயாரா?" இதுவே அது.

நானும் தயாரானேன்.. ஆனால் அப்படி ஒன்றும் தயார் படுத்தவில்லை. 2001, 2006 தேர்தலில் நடந்த கலாட்டா, ஊராட்சியில் நடந்த சம்பவங்கள், வாக்கு சாவடியில் நடந்த தில்லுமுல்லுகள், தேர்தல் ஆணையம் தூங்கிய நிலை போன்ற தகவல்கள் தான் இருந்தது..அப்பயனை போற்றுவோம். இன்னொன்று நம் நாட்டில் தீதிமன்ற தீர்ப்பை அரசாங்கமே எங்கும் ஏற்றதில்லை என்பதும் தெரிகிறது.. "சிந்திக்க சில கருத்துகள்" என்னும் தப்பில் பல அறிஞர்களின் வரிகள் இடம்பெற்றிருந்தன. அவை பலமான கருத்துக்களாக இருந்தது.. மேலும் நல்ல காலம் வந்தாச்சு என்னும் தலைப்பில் இருந்த விஷயங்களும் சிறப்பு.

இவன்
நிரஞ்சன்.