நம் இந்திய தேசிய கொடி எப்படி இருக்க வேண்டும், அதற்கு எப்படி நாம் மரியாதை செலுத்த வேண்டும். அதை பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளது.இவை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டது அவை:
*தேசிய
கொடி கம்பளி, கதர் மற்றும் பட்டு துணிகளால் நெய்யப்பட்டதாக இருக்கவேண்டும்
*கொடியின் அளவு(milli metre): 6300-4200, 3600-2400, 2700-1800, 1350-900, 900-600, 450-300, 225-150, 150-100,
*தனியார் நிறுவனங்கள், தனிமனிதர்கள் பயன்படுத்த தடை இல்லை. அதற்குரிய மரியாதை கொடுப்பதே அவசியம்.
*பொது இடத்தில தேசிய
கொடியை அவமதித்தல், கிழித்தல், எரித்தல், போன்றவை தண்டனைக்குரியவை.
*எந்த பொருளையும் மூடிவைக்க தேசிய
கொடியை அலங்கார பொருளாய் பயன் படுத்த கூடாது.
*அரசு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் பயணிக்கும் கார்களில் வலது புறம் நம் தேசிய கொடியும் இடது புறம் அந்நாட்டு தேசிய கொடியும் இடம் பெற வேண்டும் .
*பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் நம் தேசிய
கொடி முதலாவதாக ஏற்றப்பட்டு இறுதியாக இறக்க படவேண்டும். பிற நாட்டு கொடிகள் அந்நாட்டு ஆங்கில பெயரின் அகர வரசையில் ஏற்றபடவும் இறக்கபடவும் வேண்டும்.
*பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரின் மறைவின் போது நாடெங்கிலும், சபாநாயகர் ,சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகியோர் இறந்தால் தில்லி மற்றும் அவர் சார்ந்த மாநிலத்திலும், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மறைந்தால் அந்தந்த மாநிலத்திலும் தேசிய
கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் .
*அரைக்கம்பத்தில் உள்ள தேசிய
கொடியை இறக்கும்போது, முழு கம்பத்திலும் ஏற்றிய பிறகே இறக்க வேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக