செவ்வாய், 24 மார்ச், 2015

டெல்டா வரை லீ குவான் யூ மரணம்


தமிழர்களுக்கு லீ குவான் யூ மிகவும் தொடர்புடையவர்... ஏனெனில் இங்கே பலர் வாழ்கையில்  செட்டில் ஆனது சிங்கப்பூர் காசை கொண்டு தான்.... முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் சிங்கப்பூர் காசு தான் பல மாடி வீடுகளை உருவாக்கியது... அங்கே குட்டி சிங்கபூர் (கூப்பாச்சிக்கோட்டை) சின்ன சிங்கபூர்(லக்ஷ்மாங்குடி) உருவாகும் அளவுக்கு சிங்கபூர் தாக்கம் இருக்கிறது...லீ குவான் யூ நேற்று(மார்ச் 23, 2015) மரணம் அடைந்தார். அவர் மரணத்திற்கு மன்னார்குடியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை...அங்கே உறவினர் துக்கத்துக்கே சிங்கபூர் கைலியுடன் தான் துக்கம் விசாரிக்க செல்வது வழக்கம், லீ குவான் யூ துக்க செய்தி தற்போது அங்கே சிங்கபூர் கைலியுடன் பலரால் பேச பட்டுக்கொண்டு இருக்கும். லீ குவான் யூவின் மரண செய்தி சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டும் அல்ல, டெல்டா மாவட்ட மக்களையும் வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது...

இவன்
நிரஞ்சன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக