வியாழன், 28 மே, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 10: வெறி என்ற..



சை என்ற

ழகான ஒன்று ஏக்கம் என்ற

சிங்கமான ஒன்றாய் மாறாதது சந்தோசம் தான்.

னால் வெறி என்ற

பத்தான ஒன்றாய் மாறியது போல் ஓர் உள்ளுணர்வு...

இவன்
நிரஞ்சன் 

புதன், 20 மே, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 9: பட்டினி உடம்பில் உணவு


மூன்று வேளை நான் பட்டினியாக இருப்பது தெரியாமல் இரவு வேளை வந்ததும்  என் மீது அமர்ந்து பசியாறி கொண்டு இருக்கிறது கொசு..

எனக்கு உணவு இல்லை என்றாலும் என்னில் உணவு இல்லாமல் இல்லை...

இவன்
நிரஞ்சன் 

செவ்வாய், 19 மே, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 8: அப்படி என்ன பாடம்?..


அம்மா உணவகத்தில் 2 சப்பாத்தி வெறும் மூன்றே ரூபாய்... அதை கூட வாங்க முடியாத சூழ்நிலை வந்து விடுதோ!!...

வாழ்கை பாடம் கற்பிப்பதாக சொல்ல படுகிறது... பாடையில் ஏற்றி அப்படி என்ன பாடம்????

இவன்
நிரஞ்சன் 

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

தீய செயல்கள் ஒரு தொடர்ச்சி..

தீய செயல் செய்பவன் தீய செயலுக்கு ஆளானவன்..
-----
அடுத்தவன் வயிற்றில் அடிப்பவன் இன்னொருவனால் வயிற்றில் அடிக்க பட்டவன்...
-----
அடுத்தவனை கெடுப்பவன் இன்னொருவனால் கெடுக்க பட்டவன்...
-----


 ஒரு தவறுக்கு அதற்க்கு முன்பு நடந்த தவறு தான் காரணமாய் இருக்கும்...இது ஒரு தொடர்ச்சி.. இதை அரசாங்கம் என்ன செய்கிறது?... இந்த தொடர்ச்சியை தொடர விட்டுக்கொண்டே இருக்கிறது அரசாங்கம்.... தீய செயல் செய்தவனை தண்டிக்கும் சட்டம், அவன் தீய செயலுக்கு ஆளானவன் என்பதை கணக்கில் எடுத்துகொள்வதில்லை....மாறாக அந்த தீய செயலுக்கு பின்னணியை இருந்த தீய செயலை செய்த நபரையும் தண்டித்திருக்கும்.... இது அச்செயலை ஒழிக்கும் முயற்சியே அல்ல...அரசாங்கம் நாட்டில் நடக்கும் குற்றங்களை கண்டுகொள்ளவில்லை... போலீஸ் தூங்குகிறது...சட்டம் ஒரு இருட்டறை  என்றெல்லாம் சொல்வதை விட குற்றங்களுக்கு அவை தான் காரணமாகவே இருக்கிறது.

.இவன்
நிரஞ்சன்

சனி, 11 ஏப்ரல், 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 7: அப்பயனும்...!


முதலாளிக்கு உழைத்து போடுவதில் தொழிலாளி அடையும் ஒரே பயன், வேர்வை வழியே வெளியேற்றப்படும் கழிவு தான்... தற்போது குளிரூட்டப்பட்ட அறையில்(AC)  அப்பயனும் ஒழிந்தே போனது...

இவன்
நிரஞ்சன் 

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மக்களாகிய நாம்: நான் படித்த புத்தகம்

மக்களாகிய நாம்- ஆ.கி.வேங்கட சுப்பிரமணியன்

    

இப்புத்தகத்தை எழுதியவர் ஆ.கி. வெங்கட சுப்பிரமணியன். IAS அதிகாரி.
இப்புத்தகத்தை என்னை படிக்க தூண்டியது அதன் முன் அட்டையில் இருக்கும் வரிகள்.. அவை "இந்த அரசியல்வாதிகளைத் திருத்தவே முடியாது என்று வெறுமனே அங்கலாயித்துகொள்வதில் பொருள் இல்லை. அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் துடிப்பான பிரஜைகளாக நாம் மாறியாக வேண்டும். நமக்குத் தேவையானதை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். தயாரா?" இதுவே அது.

நானும் தயாரானேன்.. ஆனால் அப்படி ஒன்றும் தயார் படுத்தவில்லை. 2001, 2006 தேர்தலில் நடந்த கலாட்டா, ஊராட்சியில் நடந்த சம்பவங்கள், வாக்கு சாவடியில் நடந்த தில்லுமுல்லுகள், தேர்தல் ஆணையம் தூங்கிய நிலை போன்ற தகவல்கள் தான் இருந்தது..அப்பயனை போற்றுவோம். இன்னொன்று நம் நாட்டில் தீதிமன்ற தீர்ப்பை அரசாங்கமே எங்கும் ஏற்றதில்லை என்பதும் தெரிகிறது.. "சிந்திக்க சில கருத்துகள்" என்னும் தப்பில் பல அறிஞர்களின் வரிகள் இடம்பெற்றிருந்தன. அவை பலமான கருத்துக்களாக இருந்தது.. மேலும் நல்ல காலம் வந்தாச்சு என்னும் தலைப்பில் இருந்த விஷயங்களும் சிறப்பு.

இவன்
நிரஞ்சன்.

செவ்வாய், 24 மார்ச், 2015

டெல்டா வரை லீ குவான் யூ மரணம்


தமிழர்களுக்கு லீ குவான் யூ மிகவும் தொடர்புடையவர்... ஏனெனில் இங்கே பலர் வாழ்கையில்  செட்டில் ஆனது சிங்கப்பூர் காசை கொண்டு தான்.... முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் சிங்கப்பூர் காசு தான் பல மாடி வீடுகளை உருவாக்கியது... அங்கே குட்டி சிங்கபூர் (கூப்பாச்சிக்கோட்டை) சின்ன சிங்கபூர்(லக்ஷ்மாங்குடி) உருவாகும் அளவுக்கு சிங்கபூர் தாக்கம் இருக்கிறது...லீ குவான் யூ நேற்று(மார்ச் 23, 2015) மரணம் அடைந்தார். அவர் மரணத்திற்கு மன்னார்குடியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை...அங்கே உறவினர் துக்கத்துக்கே சிங்கபூர் கைலியுடன் தான் துக்கம் விசாரிக்க செல்வது வழக்கம், லீ குவான் யூ துக்க செய்தி தற்போது அங்கே சிங்கபூர் கைலியுடன் பலரால் பேச பட்டுக்கொண்டு இருக்கும். லீ குவான் யூவின் மரண செய்தி சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டும் அல்ல, டெல்டா மாவட்ட மக்களையும் வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது...

இவன்
நிரஞ்சன்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

டாலர் தேசம்- நான் படித்த புத்தகம்

டாலர் தேசம்- அமெரிக்காவின் அரசியல் வரலாறு- எழுதியவர் பா.ராகவன்.


நான் பல தடைகளை தாண்டி இந்த புத்தகத்தை படித்து முடித்தேன்... 857 பக்கங்கள்...  நான் படிக்க எடுத்துக்கொண்ட நாட்கள் ஒரு 8 நாட்கள்.  ஒரு நாட்டின் அரசியல் வரலாறு இப்படி தான் எழுதப்பட வேண்டும்.. பா.ராகவன் எழுத்துக்கள் மிக நேர்த்தியானது, சுவாரஷ்யமானது. வாஷிங்டன்,லிங்கன்,ஹிட்லர், ரூஸ்வல்ட், ஒசாமா பின்லேடன் மாதிரியான முக்கிய நபர்களுக்கு அவர் கொடுக்கும் intro மிக சுவாரஷ்யமானது. முக்கியமாக கம்யூனிசத்தை "நூதன ஜுரம்" என்று வருணித்தது எனக்கு மிகவும் பிடித்தவை. கறுப்பின மக்கள் மற்றும் செவ்விந்தியர்களின் கதை ஆழமாக பதிந்தவை. அவர் இப்புத்தகத்தை எழுதியதன் நோக்கமாக கூறியிருப்பது "அமெரிக்காவை புரிந்துகொள்ளுங்கள்" என்பதே... நான் அமெரிக்காவை  புரிந்துகொள்ள பெரிதும் இந்நூல் உதவியது.

அவர் எழுதிய வரிகளுள் சில,

"நாநூறு வருட சரித்திரம் கொண்ட தேசம் அது. அத்தேசம் நாநூறு வருடங்களில் குறைந்தது நூறு யுத்தங்களிலாவுது பங்கேற்றிருக்கிறது. உள்நாட்டு யுத்தம் தொடங்கி உலக யுத்தம் வரை. வியட்நாம் யுத்தம் தொடங்கி வளைகுடா யுத்தம் வரை.

ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த அரசியலையும் யுத்தங்கள் தான் தீர்மானித்திருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அரசியல்வாதிகள் யுத்தங்களை தீர்மானிப்பதும் யுத்தங்கள் அரசியலை தீர்மானிப்பதும்  முடிவற்ற பெரும் சுழல். யுத்தங்களை வருமானம் தரும் ஒரு தொழிலாகவே அவர்கள் வைத்து இருந்திருக்கிறார்கள்.

நமக்கு தெரிந்த அமெரிக்கா  நிஜமான அமெரிக்கா அல்ல. அதன் பளபளப்புக்கு பின்னால் இருக்கும் அழுக்குகள், அதன் வெற்றிக்கு பின்னால் இருக்கும் சறுக்கல்கள், அதன் ஜனநாயகத்துக்கு பின்னால் இருக்கும் சர்வாதிகாரம், அதன் ஸ்டைலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ச்லம். அதன் பணபலத்துக்கு பின்னால் இருக்கும் கடன் சுமைகள், அதன் அதிகாரத்துக்கு பின்னால் இருக்கும் அச்சுறுத்தல்கள். இவையெல்லாம் தான் நிஜமான அமெரிக்கா." 

படிக்கும் ஆசை வருகிறதா?

பின் குறிப்பு: கூடிய சீக்கிரம் ரூபாய் தேசமும் அவர் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

நன்றி krishna prasath

இவன் 
நிரஞ்சன்

சனி, 7 மார்ச், 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 6: என்னை மட்டும்


சம்பளம் வாங்கிய முதல் நாளே என் சம்பள பணத்தில் 7000 ரூபாய்க்கு நகை வாங்கி செலவு வைத்த என் மனைவியை இரவு பண்ணிரண்டு மணிக்கு அவள் தூங்கிகொண்டிருக்கும்போது வெறியுடன் பார்த்தேன். பெண் பார்க்க சென்றபோதும் முதல் இரவின்போதும் எனக்கு தேவதை போல் காட்சியளித்தவள் தற்போது ஒரு பிசாசு போல் காட்சியளித்தாள். எனக்குள் ஒரு வெறி எழுந்தது. நினைவில் நான் சம்பாதிக்க பட்ட கஷ்டம், அடைந்த அவமானம், இழந்த வாழ்கை. வெறி உச்சத்தை அடைந்து நான் அமர்ந்திருந்த இரும்பு நாற்காலியை தூக்கி அவளை அடியோ அடி என்று அடித்து கொன்று விட்டேன்..... காவல் துறை என்னை மட்டும் கைது செய்தது.

இவன்
நிரஞ்சன்.

வெள்ளி, 6 மார்ச், 2015

எனக்கு பிடிக்கும் ஹோலி பண்டிகை


இன்று ஹோலி பண்டிகை. குளிர் காலம் முடிந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்துக்களால் இப்பண்டிகை கொண்டாட படுகிறது ... வண்ணமயமான, அழகான, மிக கொண்டாட்டமான, எனக்கு பிடித்த பண்டிகை... மிருகத்தனம், பயம், மொக்கையான விருப்பம், அசிங்கமான கவுரவம் போர்த்திக்கொள்லாத பண்டிகை...வெடி வெடித்து கொண்டாடுவதை காட்டிலும் இது மிக மிக சிறப்பானது தான்...

இவன்
நிரஞ்சன். 

சனி, 21 பிப்ரவரி, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 5: பணம் பாவம்


பணம் என்ற ஒன்றை கண்டுபிடித்த பாவத்துகாகவே
மனிதன் பணத்துக்காய் கஷ்ட பட்டுக்கொண்டு தான்
இருப்பான்.... மனிதன் செய்த மிக பெரிய பாவம்.... பணம்

இவன்
நிரஞ்சன் 

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

ஏக்க பதிவுகள்:


phoenix market city, EA, city centre போன்ற மிக பெரிய மால்கள் மழையில் நனைந்ததை விட ஏக்கத்தில் நனைந்ததே அதிகம். வெயில் காய்ந்ததை விட ஏக்கத்தில் காய்ந்ததே அதிகம். அங்கே முழுக்க முழுக்க ஏக்க பதிவுகள்... சாமானியனின் ஏக்கம் பதிந்த இடங்கள் அவை..அங்கே ஜன்னல் வாடிக்கையாளனின் ஏக்கம் மட்டும் பதியவில்லை... ஜன்னலுக்கு உள்ளிருப்பவனின் ஏக்கமும் பதிந்திருக்கிறது ...  மழையும் வெயிலும் அதன் கட்டிடத்தில் விரிசல் ஏற்படுத்தலாம். ஆனால் இந்த ஏக்கம் சமூக அமைதியில் விரிசல் ஏற்படுத்த கூடியது.. சமூக அமைதியை கெடுக்கும் ஏக்கம் தேவை இல்லை... அரசியல் அமைதியை கெடுக்கும் கோபம் தேவை.....

இவன்
நிரஞ்சன் 

திங்கள், 26 ஜனவரி, 2015

குடியரசு தின வாழ்த்துக்கள் 2015

என் குடியை கெடுக்கிறது
குடி அமர்த்தப்பட்ட அரசின் துணையுடன் குடி பெயர்ந்த அரசு.

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

இவன்
நிரஞ்சன் 

வியாழன், 22 ஜனவரி, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 4: செக்யூரிட்டி கிழவன்


வயதான எனக்கு செக்யூரிட்டி வேலை மட்டுமே கிடைப்பதால், 
இளைய சமுதாயத்தையே கொன்று குவித்திட நினைக்கிறேன். என் மகன் உட்பட......

இவன்
நிரஞ்சன்

புதன், 14 ஜனவரி, 2015

கொண்டாடப்பட வேண்டிய பண்டிகை போகி தான், பொங்கல் அல்ல


உழவும் உழவனும் அழிந்து வரும் நிலையில் உழவர் தின கொண்டாட்டத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறோம்.... சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அர்த்தமே கிடையாது... அப்படி தான் உழவர் தின கொண்டாட்டமும் மாறி கொண்டிருக்கிறது... கொண்டாடப் பட வேண்டிய தினம் போகி தான்.. அநியாயம் அரங்கேற்றும் அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும், விங்ஞானிகளையும் எரித்து...
இவன்
நிரஞ்சன்

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 3: சாது மிரள வேண்டும்


தேவைகள் பூர்த்தி ஆகாத நிலையில் எத்தகைய சாதுவும் மிரள்கிறது. சாதுக்கள் மிரள வேண்டிய இடம் பார்த்து மிரண்டால் பிறந்திடும் புரட்சி.

இவன்
நிரஞ்சன் 

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 2: ஒழுங்கற்ற அரசியலின் விளைவு

"சோற்றுக்கு வழி இல்லை. என் கணவனின் காம உணர்வை தூண்டுகிறேன், இருவரும் பசி மறப்பதற்காக. இதன் விளைவாக ஒரு குழந்தை பிறந்தால் அதன் பசிக்கு என்ன செய்வேன்? என் பணக்கார தந்தை சொன்னார், இதற்க்கு காரணம் நீ அவனை காதலித்து திருமணம் செய்தது தான் என்று. எனக்கு என்னவோ என் கணவர் அடிக்கடி சொல்வது போல் இது ஒரு ஒழுங்கற்ற அரசியலின் விளைவு என்றே படுகிறது"
இவன்
நிரஞ்சன்